close
Choose your channels

மெர்சலுக்கு எதிராக வழக்கு, போலீஸ் புகார்: இதற்கு ஒரு முடிவே இல்லையா!

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்த வசனங்களை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அந்த செய்தி படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் தற்போது இந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனை இன்னும் தீர்ந்தபாடில்லை. சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் முத்துகுமார் என்ற வழக்கறிஞர் 'மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டுவோம்' என்ற வசனம் இந்துமத  உணர்வுகளை புண்படுத்தியதாகவும், வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சையாக வசனம் இடம்பெற்றுள்ள 'மெர்சல்' படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் சென்னை ஐகோர்ட்டில் 'மெர்சல்' படத்திற்கு வழங்கப்பட்ட சென்சாரை திரும்ப பெற வேண்டும் என்று அஷ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இன்னும் மெர்சலுக்கு எதிராக என்னென்ன வழக்குகள், புகார்கள் குவியபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.