தனி வார்டில் வசதியில்லை: புகார் கூறிய 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் வசதி செய்து கொடுத்த முதல்வர்

கொரோனா வார்டில் வசதியில்லை என புகார் அளித்த 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதி செய்து கொடுத்த முதல்வர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 5980 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் 66 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனி வார்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கழிப்பறை உள்பட பல இடங்கள் தூய்மையாக இல்லை என்றும் வீடியோ ஒன்றின் மூலம் புகார் அளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த நர்ஸ் இருக்கும் தனி வார்டுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின்பேரில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து புகார் அளித்த அதே நர்ஸ் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ரஜினியால் இவரை எச்சரிக்கை செய்ய முடியுமா? ரவிகுமார் எம்பி கேள்வி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன

மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

'விண்ணை தாண்டி வருவாயோ 2' டீசரை வெளியிட்ட கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக், ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களை

சென்னையில் மட்டுமே 500க்கும் மேல்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக

ஊரடங்கு நேரத்தில் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்திலும் 22 வயது இளம் பெண் ஒருவரை 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது