இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆட்டநாயகர்கள் விருதினை பெற்ற காதல் ஜோடி

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

ஒவ்வொரு முறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது இருநாட்டு ரசிகர்களும் போட்டியை போட்டியாக பார்ப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் போலத்தான் பார்ப்பதுண்டு. உடல் முழுவதும் தங்கள் நாட்டின் கொடியை வர்ணம் பூசிக்கொண்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது தேசப்பற்றை மைதானத்தில் காண்பிப்பார்கள்.

நேற்று நடைபெற்ற பிர்மிங்காம் இந்தியா-பாகிஸ்தான் போட்டியிலும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் தத்தமது நாட்டிற்கு ஆதரவாக கோஷமிட்டாலும் இருநாட்டு ரசிகர்களையும் ஒருங்கே கவர்ந்தது ஒரு ஜோடியைத்தான்.

படத்தில் இருக்கும் இந்த ஜோடியில் பெண் ரசிகர் பாகிஸ்தான் நாட்டுக்கும், ஆண் ரசிகர் இந்தியாவுக்கும் ஆதரவாக குரல் எழுப்பினாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தோள் மீது கைபோட்டு கொண்டு காதலர் போல் காட்சி அளித்தனர். போட்டியை கவர் செய்ய வேண்டிய கேமிராக்கள் பெரும்பாலான நேரங்களில் இந்த ஜோடியையே கவர் செய்ததால் மைதானம் முழுக்க இந்த ஜோடி பிரபலம் ஆனார்கள். இந்த ஜோடி காதலர்களா? அல்லது கணவன் - மனைவியா என்பது தெரியவில்லை என்றாலும் போருக்கு நடுவே பூத்துக்குலுங்கிய இந்த காதல் ஜோடி தான் நேற்றைய ரசிகர்களின் ஆட்ட நாயகர்கள் என்பது மட்டும் உறுதியானது.

More News

எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். வனமகன் நாயகி சாயிஷா

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' திரைபடம் இம்மாதம் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

கொலை வழக்கில் சிக்கினாரா தங்கமகன் மாரியப்பன்?

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் மாரியப்பன். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்த நிலையில் தற்போது இவர் மீது கொலை முயற்சி புகார் ஒன்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது...

முதல்வர் தனது பியூனுக்கு மட்டுமே கட்டளையிட முடியும். நாஞ்சில் சம்பத்

இரட்டை இலையை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ளார்...

என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

கனரக ராக்கெட்டை முதன்முதலில் செலுத்தும் இஸ்ரோ: வரலாற்று நிகழ்வு என விஞ்ஞானிகள் பெருமிதம்

விண்வெளித்துறையில் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை அனுப்பி வைக்கும் நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch) என்ற ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்துகிறது...