close
Choose your channels

ரயில் தண்டவாளத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தற்கொலை: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு என்ற ரயில்வே நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் உத்திராபதி என்பவர் தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகிய நால்வருடன் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நால்வர் மீதும் பயங்கரமாக மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே நால்வரும் உருக்குலைந்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது கடன் தொல்லை காரணமாக உத்திராபதி கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்ததாகவும் இதனை அடுத்து மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்ட உத்திராபதி திருச்சியில் தங்கி கடந்த 8 வருடமாக மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.