close
Choose your channels

'கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பும் அழுகையும்': கவினின் 'டாடா' படத்தை பாராட்டிய பிரபலம்..!

Monday, February 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைத்திருந்தார்கள் அழவும் வைத்திருந்தார்கள் என்று கவின் நடித்த ‘டாடா’ படத்தை பிரபல நடிகர் ஒருவர் பாராட்டி உள்ளார்.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் உருவான ‘டாடா’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக கவின் நடிப்பு கச்சிதமான திரைக்கதை ஆகியவற்றுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்ததால் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து வருகிறார்கள். நிச்சயம் இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘டாடா’ திரைப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டிய நிலையில் தற்போது நடிகர் சூரி பாராட்டு தெரிவித்துள்ளார். கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் ரொம்ப நிறைவான படமாக உள்ளது என்றும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை செல்போனை பார்க்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை பார்த்திருக்கிறேன் என்றும் மிகச் சிறப்பான படம் என்றும் தெரிவித்துள்ளார். கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்றும், அதேபோல் இறுதிக்காட்சியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.