close
Choose your channels

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல் 

Sunday, August 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் நட்சத்திர ஓட்டல் உள்பட ஒரு சில ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு 7 பேர் பலியானதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த ஓட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகள் 7 பேர் பரிதாபமாக பலியாகி விட்டதாகவும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நோயாளிகள் ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவிபத்தில் அவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos