'டிராகன்' பட பாணியில் ஆள்மாறாட்டம்.. இன்போசிஸ் நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டிராகன்’ படத்தின் பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேலையில் சேர்ந்த நபர் மீது காவல்துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான ’டிராகன்’ திரைப்படத்தில் தனக்கு பதில் வேறொருவரை இன்டர்வியூக்கு அனுப்பி அதன்பின் வேலைக்கு சேர்ந்த காட்சிகள் இருக்கும். அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தில் வீடியோ கால் மூலம் இன்டர்வியூ எடுக்கும் போது பிரசாந்த் என்பவர் இன்டர்வியூ அட்டென்ட் செய்தார். அவருடைய படிப்பு, சரளமாக ஆங்கிலம் பேசும் தன்மை ஆகியவற்றை வைத்து அவருடைய இன்டர்வியூ திருப்தியாக இருந்ததால் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அவருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் கடந்த ஜனவரி மாதம் பணியில் சேர்ந்தார். ஆனால் நேர்காணலின் போது பேசியவரின் குரலுக்கும் வேலையில் சேர்ந்த நபர் நபரின் குரலுக்கும் வித்தியாசம் இருந்ததாக முதலில் சந்தேகம் எழுந்தது. அது மட்டுமின்றி சிறந்த கல்வி பின்னணி இருந்தும் அவரால் அடிப்படை விஷயங்களை கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் நேர்காணலின் போது சரளமாக ஆங்கிலம் பேசிய நிலையில் நேரில் அவரால் ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை.
இதனை அடுத்து அவரது பின்னணியை விசாரித்த போது அவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அது மட்டுமின்றி இன்டர்வியூ போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களையும் வேலைக்கு சேர்ந்தவரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து பிரசாந்த் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com