close
Choose your channels

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்றும், அவ்வாறு கலந்து கொண்டு தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவர்கள் அனைவரும் தங்களை தாங்களே கொரோனா பரிசோதனை நடத்த முன்வர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து டெல்லி சென்று திரும்பிய 500க்கும் மேற்பட்டோருக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஒருசிலரை தேடும் பணியில் காவல்துறையினர் உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் ஒரு அரசு மருத்துவராக இருந்தும் இதுவரை தான் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த மருத்துவர் தன்னை எந்த விதமான பரிசோதனை செய்துகொள்ளாமல் இன்று காலை வரை பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த மருத்துவரிடம் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் சுற்றி வளைக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos