close
Choose your channels

மீண்டும் இந்தியா முழுவதும் சுற்றும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு.. பிரமாண்டமான புரமோஷன் திட்டம்!

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மார்ச் முதல் வாரத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டீசர் வெளியான பின்னர் ஏப்ரல் மாதம் முழுவதும் படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்பட படக்குழுவினர்கள் ஏப்ரல் மாதத்தில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் படத்தை புரமோஷன் செய்யவுள்ளனர்.

ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் பிரமாண்டமான புரமோஷன் காரணமாக தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று கூறப்படும் நிலையில் இரண்டாம் பாகத்தை அதைவிட அதிகமாக புரமோஷன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தை பார்த்தால் கூட இந்த படமும் ரூ.500 கோடியை வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராயின் இன்னொரு கேரக்டர் அறிமுகம் ஆகும் என்பதால் இந்த படத்திற்கு முதல் பாகத்தை விட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.