விஜய்யை அடுத்து சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

தளபதி விஜய் நடித்த 'தெறி திரைப்படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் முதல் காட்சி காணும் அனுபவத்தை பெண் ரசிகர்களுக்கும் வழங்கும் வகையில் முதன் முறையாக பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முதல் நாள், முதல் காட்சி காரைக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது.

அந்த வகையில் விஜய்யை அடுத்து தற்போது இந்த பெருமைக்குரிய விஷயம் சூர்யா படத்திற்கு கிடைத்துள்ளது. ஆம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு திரையரங்கில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் பெண்களுக்கான ஒரு பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கான டிக்கெட்டுக்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மாநிலங்களை போலவே சூர்யாவுக்கு கேரளாவிலும் பெண் ரசிகைகள் அதிகரித்து வருவதை இந்த லேடீஸ் ஸ்பெஷல் காட்சி நிரூபணம் செய்துள்ளது.

வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள இந்த படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.