close
Choose your channels

ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய சிறுத்தை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Tuesday, May 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய சிறுத்தை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

வால்பாறை அருகே பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்து தாக்கிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வால்பாறை அருகே உள்ள ஒரு எஸ்டேட்டில் சத்துணவு மையத்தில் பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் தனது வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்தபோது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அதிர்ச்சியில் மகாலட்சுமி அலறினார்

அவருடைய அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர். இருப்பினும் அந்த பெண்ணின் கை, கால் மற்றும் தொடை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பட்டப்பகலில் பெண் ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியினர்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் நுழைந்த அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என்று அந்த பகுதியினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.