close
Choose your channels

பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

Tuesday, March 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

 

உத்திர பிரதேசத்தில் ஒரு அன்பு கணவர் மனைவிக்காகச் பிணத்தின் கையைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறார். என்னவென்று தெரியாமல் சாப்பிட்ட மனைவி வாந்தி எடுத்து, பின்பு தலைத் தெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் காய்கறிகளை வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றுள்ளார். தன் மனைவி வருவதற்குள் சமைத்து வைத்து அசத்த வேண்டும் என முடிவெடுத்த ஒரு குடிகார கணவன் ஒரு சடலத்தின் கையை சமைத்து இருக்கிறார். வீட்டிற்கு வந்த மனைவி கணவன் சமைத்ததை என்னவென்று தெரியாமல் முதலில் சாப்பிட்டு இருக்கிறார். ஏதோ இறைச்சி என்று நினைத்தவருக்கு கொமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. சாப்பிட்டதை முழுவதுவமாக வாந்தியும் எடுத்து இருக்கிறார்.

எடுத்த வாந்தியை பார்த்த போதுதான் அது கை என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அலறிக்கொண்டு வெளியே ஓடி இருக்கிறார். பக்கத்தில் இருந்த காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப் பட்டு இருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அந்த நபரை விசாரித்து இருக்கின்றனர். அந்த நபர் பக்கத்தில் இருந்த கங்கைக்குச் சென்று ஒரு சடலத்தின் கையை எடுத்து வந்து சமைத்ததாக விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். இதைக் கேட்ட காவல் துறையினர் உட்பட பக்கத்தில் இருந்த அனைவரும் உறைந்தனர். பின்னர் அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.