தூத்துகுடியில் ரஜினியை யார்? என கேட்டவர் திருட்டு வழக்கில் கைது!

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

உலகமே யார் என்று தெரிந்த ரஜினியை அவமதிக்கும் நோக்கத்துடன் ‘நீங்கள் யார்? என கேட்டவர் தூத்துகுடி இளைஞர் சந்தோஷ். தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமடைந்தவர்களை மருத்துவனையில் ஒவ்வொருவரிடம் நலம் விசாரிக்க சென்ற ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என்று கேள்வி கேட்டவர் சந்தோஷ். இவர் ‘யார் என கேட்டதையும், ’நான் தாம்ப்பா ரஜினி’ என்று ரஜினி பதில் கூறியதையும் ஹேஷ்டேக்க்காக உருவாக்கி ரஜினிக்கு எதிரானவர்கள் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து தங்களுக்கு பணம் கொடுத்தவர்களை திருப்தி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என்றும் போராளி என்றும் கூறிக்கொண்டு வந்த ‘ரஜினியை யார் என கேட்ட வாலிபர் சந்தோஷ் தற்போது இருசக்கர வாகனத்தை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துகுடியை சேர்ந்த ஷ்யாம் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் சந்தோஷின் கூட்டத்தினர் அவரிடமே விற்க இணையதளம் மூலம் அணுகியுள்ளனர். காவல்துறையினர்களுடன் சென்ற ஷ்யாம், சந்தோஷ் மற்றும் அவருடைய திருட்டு கூட்டத்தினர்களை பிடித்து கொடுத்ததை அடுத்து சந்தோஷும் அவரை சேர்ந்தவர்களும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற லெட்டர்பேட் இயக்கத்தை சந்தோஷ் தொடங்கி அந்த அமைப்புக்கு அவரே தலைவர் , செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் டுவிட்டரில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது.

More News

"உலகத் தாய்மொழி தினம்" பிப்ரவரி 21

மொழி ஒரு அழகான ஊடகம். எழுத்துக்களைச் சேர்த்து, வார்த்தைகளைக் கோர்த்து,

ஆபாச நடிகையாகும் ஸ்பீல்பெர்க் மகள் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜுராசிக் பார்க் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்

திருமணமாகி குழந்தை உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் தனது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை

சிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்!

இன்றைய சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆந்திர முதலமைச்சரை அடுத்து கேரள முதலமைச்சராகும் பிரபல நடிகர்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து இருந்தார்