close
Choose your channels

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்கச் சென்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ சந்திக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மட்டுமே தகுந்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தும், அவர்களுக்கு தேவையானதை கொடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருசில ஆர்வமிகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்திக்க முயற்சி செய்வதாக அரசின் கவனத்திற்கு வந்ததை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபரை பெரோஸ்கான் என்ற நபர் சந்திக்க சென்றார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos