close
Choose your channels

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதன் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே உள்ளது

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகநாதன் ரெட்டி தனது மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூபாய் 25க்கு ஒரு கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளார்

இதனை அடுத்து உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க ஏழை முதல் பணக்காரர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு வரிசை இருப்பதாகவும் செய்தி கூறப்படுகிறது

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியில் குடிவாடா என்ற இடத்தில் உள்ள உழவர் சந்தையில் வெங்காயம் ரூபாய் 25க்கு வாங்க வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரான சாம்பையா என்ற முதியவர்.

இவர் வெங்காயம் வருவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது. இதனால் அவர் தனது நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வரிசையில் நின்று மற்றவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. வெங்காயம் வாங்க வரிசையில் நின்ற ஒருவர் திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.