மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா?

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த ‘பிசாசு 2’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’லியோ’ படத்திலும் இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்துல ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஷாருக்கானின் ’ஜவான்’, வெற்றிமாறனின் ‘விடுதலை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்ட்ராங் கேர்ள்: சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படத்திற்கு பிரபல நடிகை கமெண்ட்..!

நடிகை சமந்தா வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ட்ராங் கேர்ள் என பிரபல நடிகை ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து உள்ளார். 

விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

அஜித் நடித்த 'பில்லா, 'ஆரம்பம்' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து

மனைவி, குழந்தைகளுடன் இயற்கை விவசாயம் செய்யும் தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகினர் தாங்கள் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், ஐடி, பங்குச்சந்தை உள்பட பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்து

10 ஆண்டுகளுக்கு முன் காளையன் இப்படியா இருந்தார்? ஆச்சரிய புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார். திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.