close
Choose your channels

இம்மாதம் ஓய்வுபெற இருந்த மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

Monday, June 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் இம்மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

டெல்லியில் உள்ள லோக் நாயக் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் சரண் சிங். இவர் டெல்லியில் உள்ள லோக்நாயக் என்ற மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி சரண்சிங் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 59 வயதான சரண்சிங் வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவமனையில் சேவை செய்து வந்த சரண்சிங் ஓய்வு பெற சில நாட்கள் இருந்தபோது கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.