பிரியங்கா சோப்ராவின் வீட்டிற்கு வந்த புதுவரவு

  • IndiaGlitz, [Wednesday,November 27 2019]

விஜய் நடித்த ’தமிழன்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என உலக புகழ் பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இவருக்கும் நிக்ஜோன்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இவரது வீட்டில் ஒரு புதுவரவு வந்து உள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா, நிக்ஜோன்ஸ் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு ஒரு புதுவரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரியங்கா, ஒரு நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து இருப்பதாகவும் அந்த நாய்க்குட்டி மீது தான் மிகவும் பிரியம் வைத்திருப்பதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.