close
Choose your channels

காதலர் தினத்தில் வீட்டுக்கு வந்த புதுவரவு.. த்ரிஷாவின் சோகத்தை தீர்ப்பாரா?

Saturday, February 15, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தனது வீட்டிற்கு புது வரவு வந்திருக்கிறார்" என்றும், "அவர் தனது சோகத்தை தீர்த்து வைத்துள்ளார்" என்றும் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக பாசம் வைத்திருந்த "ஸாரா" என்ற நாய்க்குட்டி இறந்து விட்டது என்று கவலையுடன் பதிவு செய்திருந்தார்.

அதன் காரணமாக, சில நாட்களாக அவர் எந்த பதிவும் செய்யாமல் இருந்த நிலையில், "விடாமுயற்சி" திரைப்படம் வெளியான போது மட்டும் ஒரு பதிவை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று அதாவ்து காதலர் தினத்தில் ஒரு புதிய நாய்க்குட்டியை தத்தெடுத்து உள்ளதாகவும், அதற்கு ' இஸ்ஸி' என்று பெயர் வைத்துள்ளதாகவும் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், "என் வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்டபோது, கடவுளே எனக்கு அனுப்பி வைத்தார் என்று எண்ணுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், த்ரிஷாவுக்கு ஸாராவின் இழப்பை இஸ்ஸி பூர்த்தி செய்யும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment