திருமா பதிவிட்ட ஒரு புகைப்படம்....! மனம் உருகிய நெட்டிசன்கள்...!

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தனது தாயாரின் புகைப்படத்தை வெளியிட்டு மதுரையில் அம்மாவுடன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் டுவீட் செய்து வருகிறார்கள்.

இன்று அம்பேத்கர் அவர்களின் 130-ஆவது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதுரையில் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாகவும் திருமா கூறியிருந்தார். இந்நிலையில் மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விசிக-வினர் விரட்டியடித்தனர். இதன்பின் விசிக தலைவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று மாலையளவில் சமூக வலைத்தள பக்கங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனது அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு மதுரையில் அம்மாவுடன் என்பதை கேப்ஷனாக போட்டுள்ளார் திருமாவளவன். தாயரின் உடல் சற்று தளர்வுற்று படுக்கையில் உள்ளார், திருமா அவரின் கன்னத்தில் கைகளை வைத்து ஆறுதல் கூறுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இப்புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்தும், உருக்கமான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

என்னை அறியாமல் என் கண்ணில் நீர் கொட்டுகிறது எதனால் என்று தெரியவில்லை நம் தாய்க்கு பின் தலைவனை யார் அரவனைப்பார் என்பதனால்? என்றும், ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை தலைவா அம்மா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், தத்தினேன் தரையினில் தாங்கியே பிடித்தாள் பாலகன் எனது பால்மேனி நோவினால் பத்தியம் கொள்வாள் பதைபதைத்து நிற்பாள் கண்டவர் கண் படுமோ கண்ணேறு கழிப்பாள்.... நம் தாய்.... மகனாய் அருகிருந்து மனமருந்தாக பயனுருங்கள் என்றும், அண்ணா அம்மாவின் உடல் நிலையை அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள்..அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப விழைகிறேன்...ஜெய் பீம் என்றும் பல உருக்கமான டுவீட்டுக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More News

10 மாவட்டங்களில் கனமழை....!வானிலை ஆய்வு மையம் தகவல் ..!

தமிழகத்தில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெற்ற தாயை கொன்ற மகன்....! துரோகத்தால் நேர்ந்த கதி...!

15 வயதே நிரம்பிய மகன், தாயை கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தையே உலுக்கியுள்ளது.

முதல்முறையாக தமிழ்ப்பாடலை பாடிய துல்கர் சல்மான்: வைரல் புகைப்படங்கள்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா தற்போது 'ஹே அனாமிகா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்து வருகின்றார் என்பதும்,

'குக் வித் கோமாளி' பிரபலம் திறந்த கடைக்கு சீல்; ரூ.5 ஆயிரம் அபராதம்

https://www.hindutamil.in/news/tamilnadu/658881-cook-with-komali-actor-who-went-to-the-store-opening-ceremony-the-store-was-sealed-due-to-the-crowd.html

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அஜித் பட இயக்குனருக்கு வாய்ப்பு!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.