close
Choose your channels

பிரபல நடிகர் தாக்கியதாக உதவியாளர் சென்னை போலீசில் புகார்

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தாக்கியதாக அவருடைய உதவியாளர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், தான் வரவழைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக அவருடைய உதவியாளர் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் வீட்டில் நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகைகள் திருடுபோன விவகாரம் குறித்து பார்த்திபன் தனது உதவியாளர் ஜெயம்கொண்டானிடம் விசாரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்த பார்த்திபன், ' தன் வீட்டில் நகை திருடு போன விவகாரத்தில் தனது உதவியாளர் ஜெயங்கொண்டான் தொடர்பு இருப்பது தெரிந்ததால், இது போன்று பொய்யான புகாரை அளிப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபனிடம் ஜெயங்கொண்டான் கடந்த பத்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.