நடிகர் விமல் மீது போலீஸில் புகார்: பூசாரி கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விமல் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. இங்கு அவருடைய பூர்வீக வீடு உள்ளது என்பதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த கிராமத்தில்தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமலின் வீட்டிற்கு எதிரே அந்த பகுதி மக்கள் வழிபடும் விளக்குத்தூண் ஒன்று இருப்பதாகவும் அதனை சுற்றி ஊர் மக்கள் சிறிய மேடை ஒன்றை சமீபத்தில் அமைத்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் விளக்குத்தூண் மேடையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தினர், இது விமல் குடும்பத்தினரின் வேலையாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த ஊரின் கோவிலைச் சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் இதுகுறித்து போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்யுமாறு மணப்பாறை டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார் என்பதும் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

80களின் நெருங்கிய தோழியை சந்தித்த நதியா: வைரல் புகைப்படம்!

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் குஷி!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் மற்றொரு திரைப்படமான

சாலையோர இட்லிகடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

தல அஜித் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமின்றி மனித நேயமுள்ள ஒருவர் என்பதும் அவர் வெளியே தெரியாமல் விளம்பரமின்றி பல உதவிகள் செய்திருக்கிறார் என்றும் அவர் செய்த உதவிகள் பல வருடங்கள்

கொரோனா வைரஸ் காமெடி அல்ல… பாதிப்பில் இருந்து மீண்ட நட்சத்திர வீராங்கனையின் வைரல் டிவிட்!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வரும் சானியா மிர்சா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அதில் இருந்து மீண்டு ஆரோக்கியம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

தாமதமாகும் 'அண்ணாத்த': சிறுத்தை சிவா எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா அதிரடி முடிவு