close
Choose your channels

நடிகர் விமல் மீது போலீஸில் புகார்: பூசாரி கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டு!

Wednesday, January 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விமல் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. இங்கு அவருடைய பூர்வீக வீடு உள்ளது என்பதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த கிராமத்தில்தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமலின் வீட்டிற்கு எதிரே அந்த பகுதி மக்கள் வழிபடும் விளக்குத்தூண் ஒன்று இருப்பதாகவும் அதனை சுற்றி ஊர் மக்கள் சிறிய மேடை ஒன்றை சமீபத்தில் அமைத்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் விளக்குத்தூண் மேடையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தினர், இது விமல் குடும்பத்தினரின் வேலையாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த ஊரின் கோவிலைச் சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் இதுகுறித்து போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்யுமாறு மணப்பாறை டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார் என்பதும் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.