close
Choose your channels

மத்திய அரசை விமர்சித்து பாடல்: கமல் மீது காவல்துறை ஆணையத்தில் புகார்

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் ’விக்ரம் ’படத்தின் ’பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் ஒன்றிய அரசு என்று இருந்த வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கமல்ஹாசன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம் படத்தில் இடம்பெற்ற ’பத்தல பத்தல’ என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் கமல்ஹாசன் எழுதிய ஒருசில வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டார்கள். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இது குறித்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கமலஹாசன் மீது ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள

"கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது... தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே"

என்று வரிகள் அமைந்துள்ளதாகவும், அதேபோல் ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் "குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு... குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு... ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே" என்ற வரிகள் இருப்பதாகவும், இந்த வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் ’விக்ரம்’ படத்துக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.