close
Choose your channels

ரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு

Friday, January 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவர் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையாக்கும் மூக வலைதளங்களில் விவாதம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பெரியார் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos