யோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்!

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த மோஷன் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸில் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பதாகவும், இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனையடுத்து இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரித்த 'கோமாளி' படத்தில் ரஜினி குறித்த சர்ச்சை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை படத்திற்கு விளம்பரமாக அமையுமா? பிரச்சனையாக இருக்குமா? என்பது போகப்போக தெரிய வரும்.

More News

விஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி!

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும்  'தர்பார்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார். இந்த படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஜெய்ப்பூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது பாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

அரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

ஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்தார். ஒருசில காரணங்களால் அவர் சமீபகாலமாக அணியில் இருந்து