close
Choose your channels

யோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்!

Monday, August 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த மோஷன் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸில் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பதாகவும், இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனையடுத்து இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரித்த 'கோமாளி' படத்தில் ரஜினி குறித்த சர்ச்சை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை படத்திற்கு விளம்பரமாக அமையுமா? பிரச்சனையாக இருக்குமா? என்பது போகப்போக தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.