close
Choose your channels

அசோக்குமார் தற்கொலை எதிரொலி: அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக்குமார் நேற்று கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஜி.வி.உள்பட பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமைக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலையால் திரையுலகமே வெகுண்டெழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, தற்போது போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து அன்புச்செழியனை தேடி வருகின்றனர்

அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.