'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் வெளியாகும் 'விஸ்வரூபம் 2'

  • IndiaGlitz, [Monday,June 25 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை பொதுநலத்திற்கும் தனது சுயநலத்திற்கும் பயன்படுத்துவதாக ஏற்கனவே கூறியிருந்தார். தனது சினிமா அனுபவங்களையும் தனது கட்சி குறித்தும் அவ்வப்போது இந்த நிகழ்ச்சியின் இடையே கூறி வரும் கமல், தற்போது தனது படத்தின் புரமோஷனுக்கும் இந்த நிகழ்ச்சியை அவர் பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஆம், அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வரும் கமல்ஹாசன், தனது 'விஸ்வரூபம் 2' படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை நிகழ்ச்சியின் இடையே வெளியிடவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை ஐந்து கோடி பேர் பார்ப்பதாக கூறப்படும் நிலையில் 'விஸ்வரூபம் 2' டிரைலர் ஒரே நேரத்தில் ஐந்து கோடி பேர்களிடம் போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தில் கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 

More News

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்து வரும் படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து தற்போது

இம்சை அரசனுக்கு வடிவேலு பச்சைக்கொடியா?

ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் திடீரென நிறுத்தப்பட்டது

ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'டிக் டிக் டிக்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்

அனுஷ்காவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திட்டு வாங்கிய நபர்

சமீபத்தில் ஓடும் காரில் இருந்து  குப்பையை வெளியே வீசிய நபரை அனுஷ்கா கண்டித்த வீடியோ ஒன்றை அவரது கணவர் விராத் கோஹ்லி  தனது டுவிட்டரில் வெளியிட்டு

தனுஷை அடுத்து இன்னொரு நடிகருக்கும் ஏற்பட்ட விபத்து

'மாரி 2' படத்தின் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின்போது தனுஷுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்