நயன்தாராவுக்கு இன்று ஸ்பெஷல் நாள்.. ஆங்கிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான கவிதை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாராவுக்கு இன்று, அவருடைய வாழ்க்கையில் ஒரு ஸ்பெஷல் நாள் என்பதால், ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை சில ஆண்டுகளாக காதலித்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இன்றுடன், அவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
மேலும் விக்னேஷ் சிவனுடன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ஆங்கிலத்தில் ஒரு கவிதையையும் எழுதியுள்ளார். அந்த கவிதையின் தமிழாக்கம் இதோ:
நீங்கள் அடிக்கடி ஒன்றை பற்றி ஆச்சரியப்பட வேண்டும்:
யார் யாரை அதிகமாக காதலிக்கிறார்கள் என்று,
ஆனால் அந்தக் கேள்விக்குப் பதிலை
நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கக் கூடாது.
நம்மைப் பற்றி வேறெப்படி விவரிக்கச் சொல்வது எனக்குத் தெரியவில்லை
என் ஆன்மா எப்போதும் விரும்பிய எல்லாமும் நீ தான்
இருவராக இருந்த நம்மால், நான்கு பேராக மாறியிருக்கிறோம்
இதற்கு மேலே ஒன்றும் வேண்டாம்
காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீயே எனக்கு காட்டியாய்!
என் பார்ட்னருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்,
உன்னை நான் என்றும், எப்போதும் காதலிப்பேன்
இந்தப் பதிவுக்கு நடிகை சமந்தா உள்பட சுமார் 6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com