close
Choose your channels

அமரர் கல்கியின் குடும்பத்தினர்களை கெளரவப்படுத்திய பொன்னியின் செல்வன் படக்குழு!

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே நாட்களில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

அமரர் கல்கி எழுதிய நாவலை படித்த அனைவருமே இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமரர் கல்கி உருவாக்கிய கேரக்டர்களை நம் கண்முன் நிறுத்திய மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அமரர் கல்கியின் குடும்பத்தினர்களுக்காக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. மேலும் கல்கியின் குடும்பத்தினர்களை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்திய ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர்கர் அவர்களை கௌரவப்படுத்தினர். இந்த தகவல் கல்கியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1951ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தபோதிலும் மணிரத்னம் மட்டுமே இதில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.