அமரர் கல்கியின் குடும்பத்தினர்களை கெளரவப்படுத்திய பொன்னியின் செல்வன் படக்குழு!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே நாட்களில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

அமரர் கல்கி எழுதிய நாவலை படித்த அனைவருமே இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமரர் கல்கி உருவாக்கிய கேரக்டர்களை நம் கண்முன் நிறுத்திய மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அமரர் கல்கியின் குடும்பத்தினர்களுக்காக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. மேலும் கல்கியின் குடும்பத்தினர்களை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்திய ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர்கர் அவர்களை கௌரவப்படுத்தினர். இந்த தகவல் கல்கியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1951ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தபோதிலும் மணிரத்னம் மட்டுமே இதில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'டைம் என்ன மேடம்? வாட்சுகளை மட்டுமே ஆடையை உடுத்திய பிக்பாஸ் பிரபலம்!

வாட்சுகளை மட்டுமே ஆடையாக உடுத்திய பிக்பாஸ் பிரபலம் ஒருவரை டைம் என்ன மேடம்? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த முக்கிய நடிகர்: வைரல் புகைப்படம்!

சிம்பு நடித்து வரும் 'பத்து தல' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும்

எவ்வளவு அழகாக பாடுகிறார் சியான் விக்ரம், ரசித்து கேட்கும் த்ரிஷா: வைரல் வீடியோ

 சியான் விக்ரம் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே.  அவர் தான் நடித்த படங்களில் மட்டுமின்றி வேறு சில நடிகர்கள் நடித்த படங்களிலும் பாடல் பாடியுள்ளார்.

 நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது: கார்த்தியின் நெகிழ்ச்சியான பதிவு!

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தில் வந்தியதேவன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி தனது நன்றியை சமூக வலைத்தளத்தில்

வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் சுந்தர் சி - குஷ்பு: க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர் சி - குஷ்பு வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் கியூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றன.