close
Choose your channels

தற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்

Wednesday, November 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுவன் ஒருவனை அவனுடைய நண்பன் சாதுரியமாக காப்பாற்றிய சம்பவம் ராமநாதபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராமநாதபுரம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஒருவனின் தந்தை சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார். தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அந்த சிறுவன் பெரும் சோகத்துடன் மறுநாள் பள்ளிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை அந்த சிறுவன் முயன்றுள்ளார். இதனை அவருடைய நண்பன் வடிவேலன் பார்த்து உடனடியாக மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நண்பனின் தோளைப் பிடித்துக்கொண்டே உதவிக்கு மற்றவர்களை அழைத்தார்.

வடிவேலனின் அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக அங்கிருந்த மற்ற மாணவர்கள் உதவியுடன் அந்த சிறுவன் தற்கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டான். இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வடிவேலனின் சாதுரியமான செயலை பாராட்டினர். இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவன் வடிவேலனை தனது அலுவலகத்துக்கு வரச் செய்து அவனுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கமும் அளித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.