close
Choose your channels

விஜய்சேதுபதி பட இயக்குனர் வீட்டில் திருட்டு: உடனடியாக கவனித்ததால் விபரீதம் தவிர்ப்பு!

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது என்றும் சரியான நேரத்தில் இந்த திருட்டை கண்டுபிடித்ததால் மிகப் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ’றெக்க’, ஜீவா நடித்த ’சீறு’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்தின சிவா. இவருடைய வீடு சென்னை மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரில் உள்ளது. இந்த வீட்டிற்கு சமீபத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இவருடைய வீட்டின் கதவைத் திறந்து நீர் சேகரிப்பு தொட்டியின் இரும்பு மூடியைத் திருடி கொண்டு சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் தனது குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகவும் தொட்டி அருகே தான் குழந்தைகள் விளையாடுவது வழக்கம் என்றும் இந்த திருட்டை உடனடியாக பெரியவர் கவனித்ததால் குழந்தைகள் தொட்டியில் விழாத வகையில் விபரீதம் தவிர்க்கப்பட்டதாகவும் இயக்குனர் ரத்தினசிவா தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.