close
Choose your channels

படம் ஆரம்பிக்கும் முன்னரே வந்த எச்சரிக்கை: என்ன செய்ய போகிறார் சூர்யா பட இயக்குனர்?

Wednesday, July 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் ’தோசா கிங்’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க்கும் முன்னரே இந்த படத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்தது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக காலண்டரில் உள்ள ஒரு குறிப்பிட்ட புகைப்படம் தங்களை அவமதிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டிய நிலையில் இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ ஞானவேல் சமீபத்தில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு சம்பந்தமாக கதையம்சம் கொண்ட 'தோசா கிங்’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பாலிவுட்டில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே சரவணபவன் வழக்கறிஞரிடம் இருந்து எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுடன் அவதூறு பரப்பும் வகையில் திரைப்படம் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ஞானவேலின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.