'சூர்யா 45' படத்தில் இணைந்த இளம் நடிகை.. இன்று வெளியான படத்தில் நடித்தவர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று வெளியான படத்தில் நடித்த நடிகை, சூர்யாவின் 45வது படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. சூர்யா ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில், சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கர் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ள நிலையில், பிரபல மலையாள நடிகை அனகா ரவி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இவர் இன்று வெளியாகியுள்ள மலையாள படமான ’ஆழப்புலா ஜிம்கானா’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பதும், அந்த படத்தின் புரமோஷனில் தான் அவர் சூர்யாவின் 45வது படத்திலும் நடித்துள்ளதை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனகா ரவிக்கு முதல்முறையாக தமிழில் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில், ‘சூர்யா 45’ படத்தில் எந்தவிதமான கேரக்டரில் அவர் நடித்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com