என்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இளைஞர் ஒருவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்தப் பாம்பு தன்னைக் கடித்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் கடும் பதற்றம் அடைந்துள்ளனர்.

பெல்லாரி அடுத்த கம்புளி பகுதியில் வசித்துவரும் இளைஞர் ஒருவரை புதரில் இருந்த பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே இளைஞர் தனது நண்பருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மேலும் தன்னை இந்தப் பாம்புதான் கடித்துவிட்டது என மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்து மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் கடும் பதற்றம் அடைந்துள்ளனர்.

கூடவே கையில் பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இளைஞர் வந்த காட்சியை சிலர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இதுகுறித்துப் பேசிய அந்த இளைஞர் தன்னைக் கடித்த பாம்பு வேறு யாரையும் கடித்துவிடக் கூடாது என நினைத்து பயத்தில் பிடித்து விட்டேன். அதைத் தற்போது காட்டுப் பகுதியில் விட்டுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் பாம்பைக் கையில் அசால்ட்டாகப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும்

அடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்!

அமெரிக்காவில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்க முயற்சித்து இருக்கிறது.

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்!

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்றும் நானும் வருந்தி இருக்கிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை நடிகர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்.

தடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் கண்டிப்பாக

பார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ!

மும்பையின் குடியிருப்பு பகுதியில் நின்று இருந்த கார் ஒன்று நேற்று காலை திடீரென தோன்றிய பள்ளத்தில் புதைந்து மாயமானது.