close
Choose your channels

ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்!

Monday, May 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தொழிலதிபர்கள் பலர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பல தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள்ள நிலையில் சற்று முன்னர் ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது

கொரோனா பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் ஒரு கோடி நிதியை ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் அவர்கள் வழங்கினார். இன்று அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.