சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆதார் அட்டை காரணமாக விஐபிக்கள் உள்பட பலரது ரகசியங்கள் வெளியே தெரியும் அவலமும் நடந்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ஆதார அட்டை தகவல்கள் கசிந்து அதனால், அவரது மனைவி சாக்ஷி அதிருப்தி தெரிவித்திருந்ததும் இதனால் சர்ச்சை ஏற்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் ஆதார் அட்டையினால் பல போலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆதார் அட்டையில் கண்ணின் கருவிழி மற்றும் கைரேகை இருப்பதால் அதில் போலி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் கடந்த 80களில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக விளங்கி கடந்த 1996ல் தற்கொலை செய்து தனது வாழ்க்கையை முடித்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் பெயரில் ஆதார் அட்டை வழங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்க் ஸ்மிதா கடைசியாக குடியிருந்த சென்னை தி.நகர் வீட்டு முகவரியில் அவரது இயற்பெய்ரான விஜய லட்சுமி ராமலு என்ற பெயருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்கு கருவிழி மற்றும் கைரேகை அவசியம் என்ற நிலையில் மறைந்த சில்க்ஸ்மிதான் கருவிழி மற்றும் கைரேகையை அதிகாரிகள் எப்படி பெற்றனர் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

More News

ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...

'தளபதி 61' டைட்டில்: ஆறில் ஒன்றுதான் 'மூன்றுமுகம்'. படக்குழுவினர் விளக்கம்.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 'தளபதி 61' படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது...

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில்?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட

கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்...

காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...