பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, கேஸ் இணைப்பு உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆதார் எண் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே பலமுறை சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியும் இந்த நிலை மாறாவில்லை
இந்த நிலையில் சமீபத்தில் வருமான வரி கணக்கு செலுத்துவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் வருமான வரி செலுத்துவோர் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.
இன்படி 'பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும் என்றும் பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது என்றும் இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும்' என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

More News

டெல்லியை அடுத்து சென்னை: ஒருமாத போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கடைசி வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை திரும்பிய விவசாயிகள் இன்று முதல் ஒரு மாத போராட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளனர்...

ஆபத்தானவர் பட்டியலில் வைகோ! நாட்டிற்குள் நுழையவும் தடை: மலேசியா அதிரடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

இந்தியில் ஜீரோ, தமிழில் எட்டு: சூர்யாவுக்கு ஆச்சரியம் அளித்த அனிருத்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா-கார்த்தி

கோலிவுட் திரையுலகில் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்...

இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று! எப்படி தெரியுமா?

ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி, நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத தோல்வியை அடைந்தது...