close
Choose your channels

நிக்கி கல்ராணி மீது காதலா? முக்கிய விழாவுக்கு அழைப்பு விடுத்த தமிழ் ஹீரோ!

Friday, July 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிக்கி கல்ராணிக்கு மட்டும் தமிழ் நடிகர் ஒருவர் அழைப்பு விடுப்பதால் இருவருக்கும் காதல் என்று திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நடிகர் ஆதியின் தந்தை பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஊரடங்கு காரணமாக குடும்ப உறுப்பினர்கள் தவிர நடிகர் ஆதி யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நடிகை நிக்கி கல்யாணிக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவரும் ஆதி குடும்பத்தினரோடு ஆதியின் தந்தை பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை நிக்கி கல்யாணி ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன் பின் ’வேலை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’கடவுள் இருக்கான் குமாரு’ ’மொட்டசிவா கெட்டசிவா’ ’நெருப்புடா’ ’ஹர ஹர மகாதேவகி’ ’கலகலப்பு 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் ’ஈரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஆதி, ’அய்யனார்’ ’ஆடுபுலி ஆட்டம்’ ’அரவான்’ ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதி மற்றும் நிக்கி கல்யாணி ஆகிய இருவரும் இணைந்து ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மரகதநாணயம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்கள் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.