கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி கடந்த பல வருடங்களாக கமர்ஷியல் மற்றும் வெற்றி பட இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது இயக்கத்தில் சுதீப் நடித்த 'முடிஞ்சா இவன பிடி' படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கே.எஸ்,ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் நடிகர் ஆதி. 'மிருகம்', ஈரம், அரவான், உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த ஆதி, சமீபத்தில் கே.எஸ்.ரவிகுமாரை சந்தித்ததாகவும், கே.எஸ்.ரவிகுமார் கூறிய கதை ஆதிக்கு மிகவும் பிடித்துவிட்டதால் உடனே அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கவுள்ள நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ள இந்த படத்தை ரிக்வேதா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More News

விஜய்க்கு அடுத்த இடத்தில் பிரபாஸ். 'பாகுபலி 2' விழாவில் வெளியான ரகசியம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்ப்பதால் பிரபாஸின் மார்க்கெட் தற்போதே எகிறியுள்ளது....

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ரஜினியின் '2.0' படத்தின் முக்கிய பணி முடிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது...

விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது...

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...