அப்பாவாக நடித்தவருடன் திருமணமா? பரபரப்பு விளக்கம் அளித்த பாலிவுட் நடிகை!

சமீபகாலமாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் நடிகர் அமீர்கான் பற்றிய தகவல்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இரண்டுமுறை திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்ட அவர் தற்போது “தங்கல்“ படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் உலாவந்தன. இந்நிலையில் நடிகை சனா அது முற்றிலும் வதந்தி என்று விளக்கம் அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அமீர்கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தத் திருமணத்தை முறித்துக்கொண்ட அவருக்கு இளம்வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி 7 தேசிய விருது மற்றும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் “லகான்“. இந்தத் திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை நடிகர் அமீர்கான் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் 16 ஆண்டுகால திருமணபந்தம்  கடந்த ஜுலை மாதம் விவாகரத்தில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து “தங்கல்“ படத்தில் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை நடிகர் அமீர்கான் 3 ஆவதாகத் திருமணம் செய்துகொள்ள போகிறார். “லால் சிங் சட்டா“ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதுபோன்ற வதந்திகள் தற்போது உலா வருகின்றன. இதையடுத்து நடிகை பாத்திமா சனா ஷேக், தனது நெருங்கிய நண்பர்களிடம் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறியதாக இந்தியா டுடே தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அதில், நான் இதுவரை சந்திக்காத ஒருசில பேர் என்னைப்பற்றி எழுதுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இதைப் படிப்பவர்கள் நான் “நல்லவர் இல்லை“ என்று நினைக்கிறார்கள். அந்த நபரிடம் என்னைக் கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் தருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இது என்னைத் தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் மக்கள் என்னை தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை என்று நடிகை சானா கூறிய கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

More News

மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரியா? என்ன நடக்குது பிக்பாஸில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் அமீர் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மன்னிப்பு கேட்க முடியாது: ஹெட்மாஸ்டர் சிபியிடம் மோதிய பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே பிரியங்கா சக போட்டியாளர்களிடம் கருத்து வேறுபாடுடன் வாக்குவாதம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதலில் ராஜு, அதன் பின் தாமரை, தற்போது சிபியுடன் மோதும்

மருத்துவமனையில் இருக்கும் கமலஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்களுக்கு நேற்று கொரனோ பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட வில்லன் இந்த பிரபல தமிழ் நடிகரா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'டான்' கதையை முதலில் விஜய்க்கு கூறினாரா இயக்குனர் சிபி சக்கரவர்த்தி?

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி கூறியதாக