ஓவியாவை மருமகளாக ஏற்று கொண்டாரா ஆரவ் அம்மா?

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவர் ஓவியா. அவரது புற அழகை காட்டிலும் அவரது அக அழகு, உண்மை, கள்ளங்கபடம் இல்லா சிரிப்பு ஆகியவை காரணமாக ஒவ்வொருவரும் அவரை தனது குடும்பத்தின் ஒரு உறுப்பினர் போல் நேசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் தான் இன்னும் ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா கூறியிருந்தார். அதேபோல் ஆரவ்வின் அம்மாவும் ஓவியாவை தனது மருமகளாக ஏற்று கொண்டதாகவும், ஆரவ் விருப்பப்பட்டால் ஓவியாவையே தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த செய்தியை ஆரவ் அண்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறியபோது, "இந்த செய்தி, முற்றிலும் வதந்தி. அம்மா யாரிடமும் அப்படிக் கூறவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ எங்கள் அம்மா கூறியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி இருக்கின்றனர்'' என்று கூறினார்.

More News

சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் 'வேலைக்காரன் டீசர் ரிலீஸ் தேதி

குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட சிவகார்த்திகேயனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முதன்முதலில் இணைந்து நடித்த 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

சத்யஜோதி நிறுவனத்திற்கு சந்தோஷத்தை கொடுத்த 'விவேகம்' வியாபாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருது பெற்ற 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக நுழைந்த சத்யஜோதி நிறுவனம் அதற்கு பின்னர் பல வெற்றி படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வந்தது...

அஜித்தின் வெற்றிப்பட இயக்குனர் சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர் அஜித்தைவைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியிருக்கும் சிவா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியா உறுதி: காட்டி கொடுத்த டுவீட்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா மற்றும் ஜூலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் வரவேற்பை இழந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரியா பவானி சங்கர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று வெளிவந்த தகவலை நேற்று பார்த்தோம்...

கௌதமிக்கு மத்திய அரசின் மதிப்பு மிகுந்த பதவி

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்தும் கடிதம் மூலமூம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பல கோரிக்கைகளை வலியுறுத்தியவர் நடிகை கெளதமி என்பது தெரிந்ததே....