close
Choose your channels

இன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்?

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் படலத்தை ஆரம்பிக்கின்றனர்.

இந்த நாமினேஷன் படலத்தில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆரியை நாமினேசன் செய்தனர். அவர் அளவுக்கு அதிகமாக அட்வைஸ் செய்ததாகவும் அதனால் நாமினேஷன் செய்வதாகவும் போட்டியாளர்கள் காரணம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்த ஆரி, நான் ஆஜித் தவிர யாருக்கும் அட்வைஸ் பண்ண வில்லை என்று கூறுகின்றனர்

ஆரியை அடுத்து சுரேஷுக்கு நாமினேசன் குவிந்தது. அவர் கொளுத்திப் போடுகிறார் என்றும் சிம்பத்தி கிரியேட் செய்கிறார் என்றும் போட்டியாளர்கள் சுரேஷ் மீது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பட்டியலில் ஆரி மற்றும் சுரேஷ் சிக்குவது உறுதியாகியுள்ளது. இந்த இருவர் தவிர வேறு யாரெல்லாம் நாமினேஷனில் உள்ளனர், அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கேப்ரில்லாவை முதுகில் சுமந்து சுரேஷ் சமீபத்தில் ஹீரோவானார் என்பதும், ஆரி இப்போதுதான் விளையாட தொடங்கியுள்ளதால் அவர் நிச்சயம் நீண்ட தூரம் செல்வார் என்றும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத இவர்கள் இருவர் இன்று நாமினேஷனில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.