ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம். பிரபல நடிகர் கைது

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அலங்காநல்லூரில் நடந்த அமைதி பேரணியில் கலந்து கொள்ள சென்றிருந்த பிரபல நடிகர் ஆரி கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நான் சிறு வயதில் இருந்தே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்த்து வளர்ந்தவன். அந்த வகையில் என்னுடைய உணர்வை வெளிப்படுத்த இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள சென்றேன். ஆனால் மதுரை அருகே ஊமச்சிக்குளம் என்ற இடத்தில் எங்களுடைய கார் நிறுத்தப்பட்டது. காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டோம். போலீசாருடன் வாக்குவாதம் செய்து பேரணியை நோக்கி சென்றபோது போலீசார் எங்களை கைது செய்தனர்.

அதன்பின்னர் ஒருமணி நேரம் கழித்து எங்களை விடுதலை செய்து அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். நானும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டோம். அலங்காநல்லூர் பேரணியில் நாங்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் திடீரென இளைஞர்களால் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் அங்கு அசாதாரண நிலை இருந்தது. இதனால் போலிசார் தடியடி நடத்தினர். நானும் இயக்குனர் அமீரும் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தோம். பின்னர் நிலைமை சரியானதும் வெளியே வந்தோம்' என்று ஆரி கூறியுள்ளார்.

More News

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்த கொலையாளிகள் கைது

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் ரிலீஸ் தினத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி...

விஜய்யின் 'பைரவா' தமிழக வசூல் முழுவிபரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' சென்னை வசூல் நிலவரம்

கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இளையதளபதி விஜய்யின் சென்னை வார இறுதி வசூல் குறித்த நிலவரங்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் பொங்கல் திருநாளில் வெளியான பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...

சூர்யா ரசிகர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி

நாளை சூர்யா திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் புதிய டீசர் மற்றும் முக்கிய காட்சிகளின் க்ளிப்பிங்ஸ் ஆகியவற்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊர்வசி ஊர்வசி' பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலுக்கான வரிகளை அவரது ரசிகர்கள் அனுப்பி வந்தனர் என்பதும் தெரிந்ததே...