close
Choose your channels

பிக்பாஸ் ஆரியின் மாஸ் அறிவிப்பு: ஆர்மியினர் உற்சாகம்!

Wednesday, March 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றியாளர் ஆரி என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரி நடித்துவரும் ’அலேகா’, ’பகவான்’ மற்றும் ’எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தமானார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஆரியின் மாஸ் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அவரது ஆர்மியினர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஆரியின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.