close
Choose your channels

திருமண நாளில் மனைவி அனுப்பிய பால்கொழுக்கட்டை: பிக்பாஸ் போட்டியாளர் நெகிழ்ச்சி!

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி நேர்மையுடன் விளையாடி வருவதாகவும் அவர் இறுதி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஆரியின் திருமண நாளை முன்னிட்டு அவருடைய மனைவி நதியா, பிக்பாஸ் டிவியில் தோன்றி பேசினார். அப்போது தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறிய ஆரியின் மனைவி நதியா, ஏற்கனவே நாம் ஒருமுறை திருமண நாளில் பிரிந்து இருக்கின்றோம் என்றும் இது இரண்டாவது முறை என்றும் உங்களை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் பால் கொழுக்கட்டை செய்து அனுப்பியுள்ளேன் என்றும் நீங்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுங்கள் என்று கூறினார். மேலும் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் என்றும், நம் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றார்கள் என்றும் வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

அதேபோல் ஆரியின் மகளும் அந்த வீடியோவில் தோன்றி ஆரிக்கு மழலை மொழியில் வாழ்த்து கூறினார். ஆரியின் மனைவி நதியா, இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.