மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆர்த்தி ரவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் பிரிய முடிவு செய்த நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜரானார்கள். அப்போது, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், ரவி மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், ரவி மோகனை பிரிவதற்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று, ஆர்த்தி தரப்பில் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு மனுக்களுக்கு பதில் அளிக்க இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு வழங்கி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ரவி மோகனை பிரிய, மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கை திரை உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments