close
Choose your channels

கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன? அமிதாப் பரபரப்பு டுவீட்

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதன்பின் முதலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் தெரிந்ததே

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அமிதாப்பச்சனும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து அபிஷேக் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதால் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அமிதாப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 28 நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட அபிஷேக் இன்று டிஸ்டார்ஜ் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், தனக்காகவும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அமிதாப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.